புத்ராஜெயா, ஜூலை 20:
பொது இடங்களில் முக கவரிகளை அணிவது கட்டாயப் படுத்தப்படும் நடவடிக்கையை மத்திய அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் கூறினார்.
” அரசாங்கம் எல்லா நடைமுறைகளை நிர்ணயம் செய்த பிறகு பொது மக்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும்,” என்று மீட்பு நிலை நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) காலகட்டத்தில் தற்போதைய நிலவரம் குறித்து சிறப்பு நேரலையில் பேசுகையில் பிரதமர் இவ்வாறு கூறினார். அதுமட்டுமின்றி, பொது மக்கள் சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றி நடக்காமல் இருக்கும் நபர்களை சாடினார். முக கவரிகளை அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது இதில் அடங்கும்.