SELANGOR

தீபாவளியை முன்னிட்டு கோம்பாக் செத்தியா தொகுதியிலுள்ள 450 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டு

கோம்பாக், செப் 22- வரும் நவம்பர் மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு கோம்பாக் செத்தியா சட்டமன்றத் தொகுதியிலுள்ள 450 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்படவிருக்கின்றன.

இந்த உதவித் திட்டத்தின் வழி பயன்பெறுவதற்கு உண்மையில் தகுதி கொண்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக கோம்பாக் செத்தியா தொகுதிக்கான ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹிம் காஸ்டி கூறினார்.

தகுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டப் பின்னர் அவர்களுக்கு 100 வெள்ளி மதிப்பிலான பற்றுச் சீட்டுகள் வழங்கப்படும். தீபாவளிக்கு உண்டாகும் செலவுச் சுமையை  ஓரளவு குறைக்க இந்த உதவித் தொகை ஓரளவு உதவி புரியும் என்றார் அவர்.

பொதுமக்களின் நலனை பாதுகாப்பதற்காக பல்வேறு உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் எதிர்நோக்கும் நிதிச்சுமையை அறிந்த காரணத்தால் பெருநாள் சமயத்திலும் பள்ளிப் பருவம் தொடங்கும் போதும் வேண்டிய உதவிகள் அவர்களுக்கு வழங்கப்படுவதை தாங்கள் தொடர்ந்து உறுதி செய்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :