கோலாலம்பூர், அக் 3- இம்மாதம் 5 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை சிலாங்கூரில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநரை மேற்கோள் காட்டி சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு தெளிவு படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்கள் வழி பரப்பப்பட்டு வரும் அந்த தகவலை சுகாதார அமைச்சு மறுத்துள்ள-தாக இன்று இங்கு வெளியிட்ட அறிக்கையில் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு கூறியது.
அந்த செய்தி பொய்யானது என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ள நிலையில் அச்-செய்தியை பரப்பவோ பகிரவோ வேண்டாம் என்று பொது மக்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.