ஷா ஆலம், ஜூன் 19- கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்றைவிட இன்று 529 சம்பவங்கள் குறைந்து 5,911 ஆனது.
சிலாங்கூரில் இந்த எண்ணிக்கை 2,111 ஆக பதிவான வேளையில் நெகிரி செம்பிலானில் 770 சம்பவங்களும் சரவாவில் 569 சம்பவங்களும் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
மேலும் கோலாலம்பூரில் 483 கோவிட்-19 சம்பவங்களும் பேராக்கில் 245 சம்பவங்களும் கிளந்தானில் 223 சம்பவங்களும் கெடாவில் 204 சம்பவங்களும் அடையாளம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இம்மாநிலங்களுக்கு அடுத்த நிலையில் சபா (201), லபுவான் (185), பினாங்கு (167), மலாக்கா(134), திரங்கானு (62), பகாங் (56), புத்ரா ஜெயா (3) ஆகிய மாநிலங்கள் உள்ளன. பெர்சில் நோய்த தொற்று சம்பவம் பதிவாகவில்லை.