எம்.பி.ஐ. ஏற்பாட்டில் சுங்கை ஆயர் தாவார் தொகுதி மக்களுக்கு உணவுப் பொருள் விநியோகம்

சபாக் பெர்ணம், செப்டம்பர் 18, கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட சுங்கை ஆயர் தாவார் தொகுதியைச் சேர்ந்த 250 குடும்பங்களுக்கு எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் ஏற்பாட்டில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்த உணவுப் பொருள்கள் கிராமத் தலைவர்கள் மூலம் உதவிப் தேவைப்படுவோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக எம்.பி.ஐ. நிறுவன சமூக கடப்பாட்டு பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் ஒத்துழைப்புடன் கடந்த ஜனவரி மாதம் முதல் சுமார் எட்டு லட்சம் வெள்ளி மதிப்பிலான உணவுப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த உதவித் திட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் தவிர்த்து, கோழி, மீன் இறைச்சி போன்ற உணவுப் பொருள்களும் வழங்கப்பட்டன. பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான சிறந்த வழியாக இது விளங்குகிறது. இந்த உதவித் திட்டத்திற்கு பொதுமக்களிடமிருந்து நாங்கள் தொடர்ந்து விண்ணப்பங்களைப் பெற்று வருகிறோம் என்றார் அவர்.

சபாக் பெர்ணம், சுங்கை ஆயர் தாவார் தொகுதியின் சேவை மையத்தில் இந்த உணவுப் பொருள்களை விநியோகித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

 


Pengarang :