கின்ராரா தொகுதியில் திங்களன்று நடமாடும் தடுப்பூசி இயக்கம்

ஷா ஆலம், செப் 25- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசி இயக்கம் வரும் திங்கள் கிழமை  கின்ராரா தொகுதியில் நடைபெறும். இத்தொகுதிக்காக 350 டோஸ் தடுப்பூசிகள் எற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசி இயக்கத்தில் பதினெட்டு வயதுக்கும் மேற்பட்ட உள்நாட்டினரும் அந்நியத் தொழிலாளர்களும் பங்கேற்கலாம் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இந்த நடமாடும் தடுப்பூசி இயக்கம் பூச்சோங், தாமான் கின்ராரா 1, சமூக மண்டபத்தில் நடைபெறும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள யாரும் தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபடாமலிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் மாநில அரசு இந்த நடமாடும் தடுப்பூசி இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டம் இம்மாதம் 12 ஆம் தேதி தொடங்கி மாநிலத்திலுள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளை இலக்காக கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.


Pengarang :