HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று 9,117 ஆக அபரிமித உயர்வு

ஷா ஆலம், பிப் 5- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று இன்று 9,117 ஆக அபரிமித உயர்வு கண்டுள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 7,234 ஆகவும் நேற்று முன்தினம் 5,720 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஒரே நாளில் 1,500 கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்திருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 2,000 ஆக உயர்வு கண்டுள்ளது.

புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 4 ஆயிரத்து 131 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

மாநில வாரியாக நோய்த் தொற்று கண்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

சிலாங்கூர், 2,490, சபா 1,205, ஜொகூர் 901, கோலாலம்பூர் 584, கெடா 847, கிளந்தான் 673, பினாங்கு 522, பகாங் 470, நெகிரி செம்பிலான் 416, பேராக் 231, திரங்கானு 123, புத்ரா ஜெயா, 115, பெர்லிஸ் 88, சரவா 42, லவுபான் 15.


Pengarang :