கோம்பாக் மக்களுக்கு குரல் கொடுக்கும் ஒரே தலைவர் எங்கள் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி !

கோம்பாக், நவம்பர்.16-  கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகளை கேட்ட உடனே தீர்த்து வைக்கும் ஒரே தலைவர் எங்கள் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி என்று கோம்பாக் தொகுதியில் பிறந்து வளர்ந்து வந்த தினேஸ் ராஜ் தெரிவித்தார்.
அவருக்கு முன் இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு செவி சாய்க்கவில்லை.
இதனால் மக்கள் அரசியல் கட்சிகள் மீது ஆரம்ப காலகட்டத்தில் வெறுப்படைந்து விட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவர் வந்த பிறகு இங்கு இருக்கும் மக்கள் அடையாள அட்டை பிரச்சனை, சாலை என பல முக்கிய பிரச்சினைகளால் மக்கள் பரிதவித்து வந்தபோது கேட்டு உடனே எங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைத்தது எங்கள் தலைவர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மட்டுமே என்று அவர் உறக்க சொன்னார்.
மேலும் insan, bikas போன்ற பல திட்டங்களை எப்படி நாடுவது என்றும் அவர் நிறைய நிகச்சிகளின் மூலம் இந்த கோம்பாக் தொகுதியில் இருக்கும் மக்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார் என தினேஸ் ராஜ் தெரிவித்தார்.
மற்றும் ஒரு நபர் கோம்பாக் தொகுதியில் வசித்து வரும் மகேந்திரனிடம் கருத்து கேட்ட போது இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது, எங்கள் ஆதரவு பக்காத்தான் ஹராப்பான் சார்பில் கோம்பாக் தொகுதியில் போட்டியிடும் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு மட்டும்தான் என்று அவர் கூறினார்.
இளைஞர்கள் மற்றும்  முதியோர்கள் மத்தியில் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு மிகப்பெரிய வரவேற்பும், ஆதரவும் உள்ளது. முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் அவருக்கு மிக பெரிய ஆதரவு உள்ளது ஏன் என்று கேட்டால் எங்களை போல் வேலை இல்லாதவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார்.
அதுமட்டுமன்றி பூட் பாண்டா, கிரேப் ஆகிய உணவு பொருட்களை மோட்டார் சைக்கிளின் மூலம் அனுப்பி வேலை செய்து வருவோருக்கும் விரைவில் அவர் ஓய்வு எடுப்பதற்கும் தொலைபேசி சார்ஜ் போடுவதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருவேன் என்று வாக்குறுதி கொடுத்து இருக்கிறார். ஆகையால் எங்கள் இளைஞர்கள் ஆதரவு என்றைக்கும் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு மட்டுமே என்று அவர் கூறினார்.
ஆர்.பார்த்திபன்

Pengarang :