ஷா ஆலம், நவ 22; சிலாங்கூர் மாநில அரசின் வேளாண்மை மேம்பாட்டுக் கழகத்தால் (பிகேபிஎஸ்) இயக்கப்படும் அடிப்படைப் பொருள்களின் மலிவான விற்பனைத் திட்டம் நாளை காலை மணி 10 முதல் மதியம் மணி 1 வரை ஒன்பது இடங்களில் தொடரும்.
அவ்விடங்கள் சுங்கை பஞ்சாங், குவாங், ரவாங், தாமான் டெம்ப்ளர், செமினி, செரி செர்டாங், கின்ராரா, சுங்கை பெலேக் மற்றும் செமெண்டா ஆகும்.
அத்திட்டத்தில் ஒரு கோழி சுமார் 1.5 கிலோ, மற்றும் ஒரு பலகை (30 முட்டைகள்) B தரம் தலா RM10 ஆகும். மேலும் கெம்போங் மற்றும் செலயங் மீன் வகைகள் RM6, சமையல் எண்ணெய் 5 கிலோ போத்தல் ஒன்று RM25 மற்றும் அரிசி 5 கிலோ RM10 ஆகும்.
செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து அனைத்து 56 டுன்களையும் உள்ளடக்கிய அத்திட்டம் டிசம்பர் 6ஆம் திகதி முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டத்தோ மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்தார்.