ECONOMY

ஒற்றுமைத் திட்டங்களை மேற்கொள்ளும் அமைப்புகளுக்கு நிதி வழங்க வெ.300,000 நிதி ஒதுக்கீடு

ஷா ஆலம், நவ 25- ஒற்றுமை சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து வலுவுடன் செயல்படுவதை உறுதி செய்ய தொடர்ச்சியான முன்னெடுப்புகளும் பிரசார நடவடிக்கைளும் அவசியம்.

இதனைத் கருத்தில் கொண்டு மாநில அரசு கித்தா சிலாங்கூர் ஒற்றுமை மானியத் திட்டத்தை 300,000 வெள்ளி நிதியில் தொடக்கவுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஒற்றுமை தொடர்பான நடவடிக்கைகளையும் பிரசாரங்களையும் மேற்கொள்ளும் சங்கங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு இந்த நிதியிலிருந்து மானியம் வழங்கப்படும் என அவர் சொன்னார்.

ஒற்றுமை தொடர்பான மாநில அரசின் திட்டங்களும் பிரசாரங்களும்  மாநில மக்களிடம் தொடர்ச்சியாக சென்று சேர்வதையும் அதன் மூலம் நேர்மறையான தாக்கங்கள் ஏற்படுவதையும் உறுதி செய்யும் நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.


Pengarang :