ALAM SEKITAR & CUACA

மெட் மலேசியா: நான்கு மாநிலங்களில் இன்று தொடங்கி டிசம்பர் 3ஆம் தேதி வரை தொடர் மழை எச்சரிக்கை

கோலாலம்பூர், நவ 29; இன்று தொடங்கி டிசம்பர் 3ம் தேதி வரை நான்கு மாநிலங்களில்
தொடர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என தொடர் மழை குறித்து மலேசிய
வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

தும்பட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தனா மேரா, பச்சோக், மச்சாங், பாசிர் புத்தே
மற்றும் குவாலா க்ராய் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திரங்கானு மற்றும்
கிளந்தான் மாநிலங்கள் பாதிப்புக்குள்ளாகலாம் என மெட்மலேசியா இன்று ஒரு
அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி பகாங்கில் ஜெரான்டட், குவாந்தன், பெக்கான் மற்றும் சபாவில்
சண்டக்கான் (தெலுபிட், கினாபாத்தங்கன், பெலூரன், சண்டகன்) மற்றும் குடாட் ஆகிய
இடங்களும் பாதிக்கப்படலாம்.

– பெர்னாமா


Pengarang :