NATIONAL

குடும்ப ஆதரவு மற்றும் நல்ல சுற்றுச்சூழல் மாணவர் திறன்  மேம்பாட்டுக்கு  உதவும்

ஷா ஆலம், டிச.9: நல்ல மற்றும் ஆக்கபூர்வமான சுற்றுச்சூழல் மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதற்கான உத்தரவாதம் அளிக்கும் என கல்வி அமைச்சர் கூறினார்.

வஹட்லினா சிடேக்யின் (Fadhlina Sidek) கூற்றுப்படி, மாணவர்களின் திறன் உலக அளவு வளர்ச்சிக்கு பெற்றோர்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஆதரவு, மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பு முக்கிய ஊக்குவிப்பாகும்.

“அதனால்தான், ‘குழந்தையை வளர்ப்பதில் அனைவரின் பங்கு தேவை’ என்ற பழமொழி, குழந்தைகளின் குணாதிசயங்கள் வடிவமைப்பதில் வலுவான சுற்றுச்சூழல் முக்கியமானது என்பதை நிரூபிக்கிறது,” என்று அவர் நேற்று கூறினார்.

கோலாலம்பூரில் உள்ள மலேசியக் கலைப் பள்ளியின் (YET) வளர்ந்து வரும் திறமைகள் எனும் திட்டத்தின் (YET) கீழ் ஐந்து கதைப் புத்தகங்களை 2022 ஆம் ஆண்டுக்கா சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் (SIBF) அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார்.

கடந்த அக்டோபர் 19 முதல் 23 வரை ஜெர்மனியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் மலேசியப் படைப்புகளை  சர்வதேசமயமாக்கல் திட்டத்தில் கலந்து கொண்ட ஐந்து மாணவர்களால் அப்புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.

சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி 2022 டிசம்பர் 1 முதல் ஷா ஆலம் சிட்டி கவுன்சில் கன்வென்ஷன் சென்டரில் (MBSA) 11 நாட்களுக்கு நடைபெற்று வருகிறது. ஒரு மில்லியன் பார்வையாளர்களை இலக்காகக் கொண்டுள்ள அந்நிகழ்வு இந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைகிறது..


Pengarang :