ANTARABANGSASUKANKINI

பிரேசில் 4-2 கோல் கணக்கில் அரையிறுதிக்கு முன்னேறத் தவறியது

ஷா ஆலம், டிச 10: கட்டாரின் தோஹாவில் உள்ள எஜுகேஷன் சிட்டி  அரங்கில் நேற்று இரவு நடைபெற்ற 2022 உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் ஐந்து முறை சாம்பியனான பிரேசில், குரோஷியாவிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து அரையிறுதிக்கு முன்னேற தவறியது.

90 நிமிட ஆட்டத்துக்குப் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறியதால் ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது.

நெய்மர் கூடுதல் நேரத்தின் பிற்பகுதியில் கோ-அஹெட் கோலுடன் பிரேசிலை முன்னிலை படுத்தினார், ஆனால் இரண்டாவது பாதியில் புருனோ பெட்கோவிச் கோல் கணக்கைச் சமன் செய்தார்.

முடிவு 1-1 என நீடித்தது, பெனால்டி கோல் மூலம் வெற்றியாளரை தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கத்தாரின் லுசைல் மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா 4-3 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷூட் அவுட்டில் நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.


Pengarang :