ஷா ஆலம், டிச 22: இன்று பிற்பகல் 4 மணி வரை சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா முழுவதும் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றும் வீசக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.
மலாக்கா, லாபுவான், நெகிரி செம்பிலன், ஜோகூர், சரவாக் மற்றும் பேராகிலும் இதே நிலை ஏற்படும் என்று ட்விட்டர் மூலம் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
மெட்மலேசியாவின் கூற்றுப்படி, ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக 20 மில்லி மீட்டர் (மிமீ/மணி)க்கு இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் இருக்கும் போது எச்சரிக்கைகள் வெளியிடப்படுகின்றன..
சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு yes can uploadhttp://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பதிவிறக்கம் செய்யவும்.