SELANGOR

472 பகுதிகளில் சுமார் 86 சதவீத நீர் விநியோகம் மீட்டமைக்கப்பட்டுள்ளது

ஷா ஆலம், டிச 26: இன்று மதியம் 12 மணி நிலவரப்படி இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் (எல்ஆர்ஏ) ஏற்பட்ட தடை நீக்கப் பட்டதால் பாதிக்கப்பட்ட ஐந்து இடங்களை உள்ளடக்கிய 472 பகுதிகளில் சுமார் 86 சதவீத பகுதிகளுக்கு நீர் விநியோகமளிக்கப்படுகிறது

பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் எஸ்டிஎன் பிஎச்டி (ஏர் சிலாங்கூர்) கூறுகையில், கோலா லங்காட் மற்றும் புத்ராஜெயா 100 சதவீதம் மீட்சியை பதிவு செய்துள்ளன, அதைத் தொடர்ந்து சிப்பாங் (95 சதவீதம்), உலு லங்காட் (91 சதவீதம்) மற்றும் பெட்டாலிங் (71 சதவீதம்) ஆகும்.

“நீர் விநியோகத்தை மீட்டெடுப்பதற்கான காலம் பயனரின் இருப்பிட தூரத்தைப் பொறுத்து வேறுபடும்.

“ஆயர் சிலாங்கூர், மற்ற பகுதிகளில் மீட்பு செயல்முறை திட்டமிட்டபடி நடப்பதை உறுதிசெய்ய, நீரை பெறுவோர் கவனமாகப் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறது,

துர்நாற்றம் மாசு சம்பவத்தைத் தொடர்ந்து, 472 பகுதிகளில் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடைகள் ஏற்பட்டன.


Pengarang :