NATIONAL

சிலாங்கூரில் ஐந்து மாவட்டங்களில் இன்று மாலை கனமழை பெய்யும் என மெட் மலேசியா தெரிவித்துள்ளது

ஷா ஆலம்,  ஜன 10: கோலா சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங் மற்றும் கோலா லங்காட் ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 3 மணி அளவில் கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) முகநூல் மூலம் தெரிவித்துள்ளது. கோலாலம்பூரிலும் இதே வானிலைதான் இருக்கக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் (மி.மீ./மணி)க்கு அதிகமாக ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது my Cuaca பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :