ALAM SEKITAR & CUACANATIONAL

சிலாங்கூர் முழுவதும் இன்று இரவு வரை இடியுடன் கூடிய மழை

ஷா ஆலம், பிப் 11: சிலாங்கூர் முழுவதும் இன்று இரவு வரை இடியுடன் கூடிய மழையும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) கணித்துள்ளது.

கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் மலாக்கா முழுவதும் இதே நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப் படுவதாக ட்விட்டர் மூலம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கெடா, பினாங்கு, பேராக், பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :