ALAM SEKITAR & CUACANATIONAL

ஜொகூரில் வெள்ள நிலை மோசமாகி வருகிறது

ஜொகூர் பாரு, மார்ச் 1: ஜொகூரில் வெள்ளம் நிலை மோசமாகி வருகிறது, இன்று காலை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 1,591 ஆக பதிவான நிலையில்
மதியம் 12 மணி நிலவரப்படி அந்த எண்ணிக்கை 5,878 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் 1,575 குடும்பங்கள் 54 தற்காலிக தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தங்க
வைக்கப்பட்டுள்ளனர் என மாநிலப் பேரிடர் மேலாண்மை குழு (ஜேபிபிஎன்) ஓர்
அறிக்கையின் மூலம் தெரிவித்தது.
குளுவாங் மற்றும் செகாமட் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும்.
மேலும், ஜொகூரில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று மாலை வரை மழை பெய்யும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், அங்குள்ள பல ஆறுகள் அபாய அளவைக் கடந்துள்ளது
குறிப்பிடத்தக்கது.

– பெர்னாமா


Pengarang :