NATIONAL

எஃப்.ஏ.எஸ். மகளிர் சூப்பர் லீக் அரையிறுதிச் சுற்றுக்குக் கிளானா யுனைடெட், எம்.பி.பி.ஜே. எஃப்.சி, தேர்வு

ஷா ஆலம், மார்ச் 6- சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டிலான மகளிர் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு நான்கு குழுக்கள் தேர்வாகியுள்ளன.

இம்மாதம் 4ஆம் தேதி சுபாங் ஜெயா, எம்.பி.எஸ்.ஜே. திடலில் நடைபெற்ற ஆட்டத்தில் எப்.சி. ஸ்வாட் குழுவை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்ததன் மூலம் கிளானா யுனைடெட் குழு அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் எஸ்.எஸ்.எஸ். லீபார்ட் குழுவை அதே 2-0 கோல் கணக்கில் வீழ்த்தி எம்.பி.எஸ்.ஜே. எப்.சி. குழு அரையிறுதிச் சுற்றுக்கான இடத்தைப் பிடித்தது.

நேற்று 5ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் யுபிஎன்எம் எப்.சி. குழு பிஜேகித்தா குழுவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இதனிடையே, அரையிறுதிச் சுற்றுக்கான மற்றொரு போட்டியில் எப்.சி. ஸ்பைஸ்கோல்ஸ் மற்றும் யு.ஐ.டி.எம். லையனஸ் குழுக்கள் முழு நேர ஆட்டத்தின் போது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டன.

இதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட பினால்டியில் எப்.சி. ஸ்பைஸ்கேல்ஸ் குழு 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இவ்விரு அரையிறுதி ஆட்டங்களும் வரும் 11ஆம் தேதி அரேனா எம்.பி.பி.ஜே. சுபாங் ஜெயாவில் நடைபெறும்.


Pengarang :