SELANGOR

ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் கலாச்சாரப் படைப்புகளும் ஏற்பாடு

ஷா ஆலம், ஏப்ரல் 27: மாநில அரசின் ஐடில்பித்ரி திறந்த இல்ல நிகழ்ச்சியில் கலாச்சாரப் படைப்புகளும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

இரவு 8 மணி முதல் 11 மணி வரை நடைபெறவுள்ள ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி உபசரிப்பு நிகழ்ச்சியில் ராயா பண அன்பளிப்பு நிகழ்வு இடம்பெறும்.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் உரை நிகழ்த்திய பின்னர் வருகையாளர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

இந்நிகழ்வு நாளை சிப்பாங்கில் தொடங்கி ஒன்பது மாவட்டங்களில் நடைபெற உள்ளது. அவை உலு சிலாங்கூர், கிள்ளான், உலு லங்காட், பெட்டாலிங், கோலா லங்காட், சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், கோம்பாக்.


Pengarang :