SELANGOR

சுபாங் ஜெயா மாநகராட்சியின் வாகன இல்லாத தினத்தில் பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் இடம்பெற்றன

ஷா ஆலம், மே 8: சுபாங் ஜெயா மாநகராட்சியின் வாகன இல்லாத் தினம் @ செலமாட் பாஹி சுபாங் ஜெயா முன்னிட்டு நேற்று ஏயோன் பிக் சுபாங் ஜெயா சூப்பர் மார்க்கெட் முன் பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கார்ப்பரேட் மற்றும் மூலோபாய மேலாண்மைத் துறையின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவு, சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல், நிதானமாக நடப்பது மற்றும் ஏரோபிக்ஸ் போன்ற நடவடிக்கைகள் ஏற்பாடு செய்திருந்ததாகத் தெரிவித்தது.

“மேலும், காலை உணவு விருந்து, வில்வித்தை, இலவசச் சுகாதார பரிசோதனை, மறுசுழற்சி திட்டம் மற்றும் அதிர்ஷ்ட குலுக்குப் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.

“இந்த திட்டத்தின் நோக்கம், நகரத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதோடு, வாகனங்களின் பயன்பாட்டைக் குறைப்பது ஆகும். இத்திட்டம் சுபாங் ஜெயா மாநகராட்சியின் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

“சுபாங் ஜெயாவின் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கு இந்நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள் என்று ஓர் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

சுபாங் ஜெயா மாநகராட்சியின் கருத்துப்படி, இந்த திட்டம் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான முயற்சியாகும்.

“எம்பிஎஸ்ஜேயின் பசுமை நகர செயல் திட்டத்தை ஆதரிக்கும் வகையில் சுபாங் ஜெயா சமூகத்தினரின் வருகையை எம்பிஎஸ்ஜே வரவேற்றது,”.


Pengarang :