SELANGOR

கிளானாங் கடற்கரை கடல் திருவிழா 2023 இல் 200 பேர் பங்கேற்பு

ஷா ஆலம், ஜூன் 19: ஜூன் 17 அன்று கோலா லங்காட் நகராண்மை கழகம், கிளானாங் கடற்கரையில் ஏற்பாடு செய்த கடல் திருவிழா 2023 200 பங்கேற்பாளர்களின் பங்கேற்புடன் கலகலப்பாக இருந்தது.

பந்திங் அருகிலுள்ள கிளானாங் கடற்கரையில் நடைபெற்ற கடல் விழாவில் மொத்தம் RM5,000 மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன என எம்பிகேஎல் சுற்றுலா அதிகாரி ராஜா நூர்ஃபர்ஹானிம் ராஜா ஹசானுடின் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ராஜா நூர்ஃபர்ஹானிம், முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வானது வார இறுதியில் குடும்பங்கள் ஓய்வெடுக்கும் இடமாகக் கிளானாங் கடற்கரையை மேம்படுத்த உதவும் என்றார்.

“இந்த நிகழ்வு சமூகம் சார்ந்த சுற்றுலாவில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது மக்களிடையே நெருக்கத்தைக் ஏற்படுத்துவதோடு பல்வேறு சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் சமூகத்தை ஈடுபட செய்கிறது.

” இதை வருடாந்திர நிகழ்வாக மாற்றுவது பற்றி நாங்கள் பரிசீலிப்போம்,” என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வில் நாட்டுப்புற விளையாட்டுகள் மற்றும்  சுவாரஸ்யமான புகைப்படம் எடுத்தல் போன்ற பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், இதில் சிலாங்கூர் சுற்றுலா, சிலாங்கூர் மாநில மலாய் கலாச்சாரம்  மற்றும் பாரம்பரியக் கழகம் (படாட்), தேசிய கைவினை நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களின் கண் காட்சிகளும் இடம் பெற்றன.


Pengarang :