ஷா ஆலம், ஜூன் 23: மாநிலத் தேர்தல் பிரச்சாரங்களின் போது அதிகாரப்பூர்வ வாகனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அனைத்து ஆட்சிக் குழு உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தினார்.
வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல் நாளாக இல்லாத வரையில் இந்தச் சட்டம் விதிகளுக்கு எதிரானது அல்ல என்று கூறிய அவர், மக்களிடையே எதிர்மறையான பிம்பத்தை தவிர்க்கும் நோக்கில் இந்தச் செயல் இருப்பதாக தெரிவித்தார்.
வேட்பாளர் நியமன நாளுக்கு முந்தைய நாள், அனைத்து துறை உறுப்பினர்களும் தங்கள் அதிகாரப்பூர்வ வாகனங்களைத் திருப்ப ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார் சிலாங்கூரின் பக்காத்தான் ஹராப்பான் தலைவர். அதற்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
“எக்ஸ்கோக்கள் தங்கள் அதிகாரப்பூர்வ வாகனங்களை (பிரசாரத்தின் போது) கொண்டு வரக்கூடாது என்பதற்காக வன் அவர் வலியுறுத்தினார்.
“நாங்கள் நியமன நாளுக்கு முந்தைய நாள் அதிகாரப்பூர்வ வாகனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த தொடங்குவோம், ஏனெனில் இன்று சட்டமன்றம் கலைக்கப் பட்டாலும், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டிய அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் இன்னும் உள்ளன,” என்று அவர் கூறினார்.
அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சமூகத் தலைவர்களுடனான மாதாந்திர ஒன்றுகூடலில் இன்று அவர் உரையாற்றினார். மேலும், மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம் மற்றும் மாநிலத் தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.