எதிர்வரும் ஆகஸ்ட் 12 -ஆம் தேதி 6 -மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஓட்டு போடுவது உங்கள் உரிமை மக்களாகிய நீங்கள் செய்ய போகும் நல்ல முடிவு உங்களை மட்டும் பாதிப்பதில்லை, அது நாட்டுக்கு பயனான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் அவா.
இதுவரை மக்களுக்கு கிடைத்துள்ள பல்வேறு அனுகூலங்கள், கடந்த காலங்களில் நம் மக்கள் கடந்து வந்த இக்கட்டுகளை சீர்தூக்கிப் பார்த்து உங்கள் ஓட்டை யாருக்கு, எந்த கட்சிக்கு போட வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று சிலாங்கூர் மாநில காபந்து அரசின் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கோல சிலாங்கூரில் நடைபெற்ற மடாணி தேர்தல் பயணத்தின் போது அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த மாநிலத்தின் வளர்ச்சி , இம்மாநில மக்களிடம் நிலவும் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. ஆக நாம் தொடர்ந்து வெற்றிப் பெற, மாநிலம் வளர்ச்சி பெற இங்குள்ள எல்லா மக்களிடமும் ஒற்றுமையை வளர்த்து மாநிலத்தை மேம்படுத்த வேண்டும். ஆனால் , நம்மை எதிர்ப்பவர்கள், இங்கே ஆட்சி அமைக்க துடிப்பவர்கள், மக்களின் ஒற்றுமைக்கு எதிராக பேசி வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அவர்கள் ஆட்சி அமைத்தால் இங்குள்ள ஒற்றுமையை மட்டும் நாம் இழக்க மாட்டோம். அதனுடன் இம்மாநில வளமும் அழிக்கப்பட்டு விடும்.
கடந்த 5 ஆண்டுகளில் பல முறை மாநிலத்தை வளம் வந்துள்ளதாகவும், எல்லா மாவட்டங்களிலும் நிலவக்கூடிய பிரச்சனைகள் குறித்து ஆங்காங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அப் பிரச்சனைகளை தீர்க்க பக்கத்தான் மாநில அரசு பாடு பட்டுள்ளதாக கூறினார் அமிருடின் ஷாரி