NATIONAL

மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், செப் 7: சிலாங்கூரில் இன்று இரவு வரை மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவை உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்கள் ஆகும் என்று முகநூலில் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

இதே நிலை தான் கோலாலம்பூர், கெடா, பேராக், கிளந்தான், பகாங், நெகிரி செம்பிலான், ஜொகூர், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின்
தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு
அல்லது அதற்கும் மேலாக பெய்யும் போது
எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின்
முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப்
பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும்
அல்லது myCuaca பயன் பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :