SELANGOR

இன்று மேலும் மூன்று இடங்களில் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா விற்பனை தொடரும்

ஷா ஆலம், அக் 16:  அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு
விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் இன்று மேலும் மூன்று இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும்.

இன்று மஸ்ஜிட் கம்போங் ஜெயா செத்தியா வளாகம் (ஈஜோக்), எம்பிஎஸ்ஏ பூலாய் செக்‌ஷன் 27A மண்டபம், ஜாலான் காபிஸ் (கோத்தா கெமுனிங்) மற்றும் கம்போங் கெலானாங் பொது மண்டபம் (மோரிப்) ஆகிய இடங்களில் விற்பனை நடைபெறும்

ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த 2,850 இடங்களில் சிலாங்கூர் விவசா ய மேம்பாட்டுக் கழகத்தால் (PKPS) நடத்தப்பட்ட இந்த மலிவு விற்பனையைச் செயல்படுத்த  சிலாங்கூர் RM40 மில்லியன் மானியம் செலவிட்டது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூ
லம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


Pengarang :