ஷா ஆலம், ஏப் 4 – கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் மே மாதம் 11ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 27ஆம் தேதியும் தொடக்கக் கட்ட வாக்களிப்பு மே 7ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி சாலே இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் புற்று நோய் காரணமாக கடந்த மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
ஜசெக பிரதிநிதியான லீ (வயது 58) கடந்த மூன்று தவணைகளாக இத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார்.