கோலாலம்பூர், ஏப் 15 – பப்புவா நியூ கினியின் நியூ பிரிட்டன் வட்டாரத்தில் இன்று அதிகாலை 4.56 மணியளவில் ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் தென்கிழக்கு நியூ பிரிட்டன் தீவான பப்புவா நியூ கினியிலிருந்து தென்கிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் 5.8 டிகிரி தெற்கிலும், 151 டிகிரி கிழக்கிலும் 68 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையம் கூறியது.
இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவுக்குச் சுனாமி அபாயம் ஏற்படவில்லை என்றும் அது குறிப்பிட்டது.