கோலா குபு பாரு, ஏப் 22: இன்று கோலா குபு பாரு, பெர்தாக்கில் உள்ள ஓராங் அஸ்லி கிராமத் திடலில் நடைபெற்ற கால்பந்து பயிற்சி பட்டறைக்கான அழைப்பை ஏற்று சிறப்பு வருகை புரிந்தார் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு. அவர் ஓராங் அஸ்லி சமூகத்துடன் தனது நேரத்தை செலவிட்டார்.
இந்நிகழ்வை மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
மேலும், இந்நிகழ்வில் பண்டார் பாரு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குவா மற்றும் கவுன்சிலர் ராஜேஸ் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இப்பட்டறையில் பங்கேற்ற அனைத்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அமைச்சர் ஹன்னா இயோ காற்பந்து வழங்கி நிகழ்வை மேலும் உற்சாகப்படுத்தினார்.