NATIONAL

ஆறாம் படிவ மாணவர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு தொடர்பான முன்மொழிவு பரிசீலனை செய்யப்படுகிறது

கங்கார், ஜூலை 10: ஆறாம் படிவ மாணவர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை வழங்குவதற்கான முன் மொழிவை கல்வி அமைச்சு (கேபிஎம்)  நிதி அமைச்சகம் வழி தேசிய பட்ஜெட் நிலைக்குக் கொண்டு வருவதற்கு முன் பரிசீலித்து வருகிறது.

நாட்டில் ஆறாம் படிவக் கல்வியின் தரத்தை விரிவுபடுத்துவதையும் மேம்படுத்துவதையும் உறுதி செய்வதோடு, அக்கல்வி முறையை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளில் இந்த நடவடிக்கையும் ஒன்றாகும் என அமைச்சர், ஃபத்லினா சிடேக்,

“நாங்கள் கவனம் செலுத்த விரும்பும் முன்முயற்சிகளில், கொடுப்பனவும்  அடங்கும். ஆறாம் படிவ மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், இந்த நாட்டில் உள்ள மாணவர்களின் மேம்பாடு தொடர்பான பல முக்கிய முயற்சிகளை அமைச்சகம் செயல்படுத்தியுள்ளது. இதில் மனநலம் தொடர்பான நடவடிக்கைகள் அதாவது ஆலோசகர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது மற்றும் அவர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவது ஆகியவை அடங்கும்.

– பெர்னாமா


Pengarang :