NATIONAL

சாலை விபத்தில் சிக்கியப் பெர்டானா வளாகத்தின் பாதுகாவலருக்குப் பிரதமர் நன்கொடை வழங்கினார்

கோலாலம்பூர், ஜூலை 27: சமீபத்தில் சாலை விபத்தில் சிக்கிய ஶ்ரீ பெர்டானா
வளாகத்தின் பாதுகாவலர் முகமட் நுராமின், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிமிடமிருந்து நன்கொடை பெற்றார்.

மருத்துவச் செலவுகள் மற்றும் பாதுகாவலரின் குடும்பத்தின் அன்றாட அலுவல்களின்
சுமையைக் குறைக்கும் இந்த நன்கொடையை சியாரா மடாணி திட்டத்தின் மூலம்
பிரதமரின் பிரதிநிதி அரசியல் செயலாளர் அஹ்மட் ஃபர்ஹான் பௌசி வழங்கினார்.

முகமட் நுராமின் விபத்தில் பலத்த காயங்களுக்கு ஆளானார். மேலும் பல அறுவை
சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. இப்போது அவர் படிப்படியாகக் குணமடைந்து
வருவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது என பிரதமர் முகநூலில் தெரிவித்தார்.

சகோதரர் முகமட் நுராமின் விரைவில் குணமடையட்டும். அப்போழுதுதான் வழக்கம்
போல் கடமைக்குத் திரும்ப முடியும்“, என்று முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளது.

– பெர்னாமா


Pengarang :