பாப்பாராய்டு ஏற்பாட்டில் பந்திங்கிலுள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு தேசிய, மாநிலக் கொடிகள் விநியோகம்

(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஆக.16- பந்திங் சட்டமன்றத் தொகுதியிலுள்ள அரசாங்க
அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
வீ.பாப்பாராய்டு நேற்று தேசிய மற்றும் சிலாங்கூர் மாநிலக் கொடிகளை
வழங்கினார்.
கோல லங்காட் நில மற்றும் மாவட்ட அலுவலகம், கோல லங்காட்
மாவட்ட போலீஸ் தலைமையகம், தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி, சுங்
ஹூவா சீனப்பள்ளிக்கு பாப்பாராய்டு நேரில் வருகை மேற்கொண்டு
கொடிகளை வழங்கியதோடு பந்திங் தொகுதியிலுள்ள அனைத்து கிராமத்
தலைவர்களிடமும் அவர் கொடிகளை ஒப்படைத்தார்.
இந்த கொடி வழங்கும் திட்டத்திற்கு அனைத்துத் தரப்பினர் குறிப்பாக
பள்ளி மாணவர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்ததாக அவர்
சொன்னார். இளம் பிராயத்தினராக இருந்த போதிலும் அம்மாணவர்கள்
பெரும் உவகையோடு கொடிகளை அசைத்து நாட்டுப்பற்றை
புலப்படுத்தினர்.
தேசிய தினத்தின் முக்கியத்துவத்தை மாணவர்கள் மத்தியில் விதைப்பதில்
சிறப்பான பங்கினை ஆற்றிய ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும்
தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பாப்பாராய்டு குறிப்பிட்டார்.

Pengarang :