SUKANKINI

இந்த வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன்

கோலாலம்பூர் – நாட்டின் சைகிள் வீரர் அசிஸ்சூல்ஹஸ்னி அவாங் இந்த உலக வெற்றியாளர் பட்டத்தை கைப்பற்றுவதற்காக சுமார் 10 ஆண்டுகள் காத்திருந்ததாக கூறினார். ஹாங் கோங்கில் நடைபெற்ற உலக சைகிள் போட்டியில் வெற்றியாளராய் தேர்வான அவர் தனது நீண்டநாள் கனவு நினைவானதாக கூறினார்.

உலக பட்டத்தை இதுவே முதன் முறையாக மலேசிய வீரர் ஒருவர் பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்னர் பிரசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதி சுற்றின் போது உலக தர வரிசையில் முதன்மை வீரர்கள் கடும் போட்டியை கொடுத்த போதிலும் வெற்றி கோட்டை தொட்டபோது தனது ஆனந்தம் எல்லையின்றி விரிந்ததாகவும் அவர் கூறினார்.

 

 

 


Pengarang :