SELANGOR

பண்டான் பெர்டானா எம்பிஎஜே அரங்கம் ஆகஸ்டு மாதம் முழுமையாக செயல் செயல்படும்

ஷா ஆலம், 19 ஏப்ரல்

பண்டான் பெர்டானா அம்பாங் ஜெயா நகராண்மை கழக  (எம்பிஎஜே) அரங்கத்தின் மறுசீரமைப்புப் பணிகள் 2015 ஆண்டு ஆரம்பித்து  இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முழுமையான பயன்பாட்டில்  இருக்கும்.

எம்பிஎஜே தலைவர், அப்துல் ஹமீத் ஹுசேன் கூறுகையில் கட்டுமான பணிகள் ரிம17 மில்லியன் செலவு செய்யப் பட்டதாகவும் மற்றும்  அடிப்படை வசதிகள் மேம்பாட்டின் கீழ் தன் நிர்வகிக்கும் பகுதியில்  மேற்கொண்டதாக குறிப்பிட்டார்.

இந்த  அரங்கில்  எம்பிஎஜே வட்டாரத்தில்  உள்ள மக்களுக்கு விளையாட்டு வசதிகள்  உட்பட அனைத்தும் அமைந்துள்ளது.

அமைக்கப்பட்ட அரங்கம் 2.37 ஹேக்டர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டதாகவும் 400 மீட்டர் அருகாமையில் எம்ஆர்ஆர்2 நெடுஞ்சாலை  இருப்பதாக விளக்கம்  அளித்தார்.

ydp-mpaj-abd-hamid-hussain1000 பேர்் அமரக் கூடிய  அரங்கம், 400 மீீட்டர் ஓட்டப் பந்தய தளம், காற்பந்து மைதானம் மற்றும் கார் நிறுத்துமிடம் போோன்ற  வசதிகள்

கொண்டிருக்கும் என்று தெரிவித்தார்.

 

 

-AA-


Pengarang :