RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார் மூன்று நாடுகளுக்கான பயணம்

ஷா ஆலம், 29 ஏப்ரல்:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அவர்கள் மே 1 இருந்து மே 5 வரை மொரோக்கோ, ஜோர்டான் மற்றும்  எகிப்து நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு அங்கு கல்வி கற்கும் சிலாங்கூர் மாணவர்களை சந்திக்க இருக்கிறார்.

இந்த சந்திப்பு சிலாங்கூர் மாணவர்களுக்கு மாநில அரசாங்கத்தின் உதவி நிதிகளை வழங்கவும்  இந்த மூன்று நாடுகளில் படிக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்த  உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முகமட் அஸ்மின்  இந்த நாடுகளின் மலேசியா தூதர்களையும் சந்திக்க  ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த பயணத்தில் மாநில சுகாதாரம், பொதுநல  மற்றும் மகளிர்  குடும்ப நல  ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி மற்றும் மாநில அரசாங்க  அதிகாரிகளும் கலந்து கொள்பவர.

 


Pengarang :