SELANGOR

வான் ருக்மான் சிலாங்கூரின் வர்த்தக குற்றவியல் விசாரணை இலாகாவின் புதிய தலைவரானார்

ஷா ஆலம், மே 3:

திரெங்கானு காவல்துறையின் குற்றவியல் விசாரணை இலாகாவின் (சட்டப் பிரிவு) துணை தலைவரான துணை ஆணையர் வான் ருக்மான் வான் ஹாசான் சிலாங்கூர் மாநில காவல்துறையின் வர்த்தக குற்றவியல் விசாரணை இலாகாவின் தலைவராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் மூத்த துணை ஆணையர் சக்ரி அரீஃபீன் புக்கிட்  அமான் வர்த்தக குற்றவியல் விசாரணை இலாகாவின் துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றதையடுத்து இந்தப் பதவியில்  அமர்த்தப்பட்டார்.

இந்த பதவி  ஒப்படைப்பு நிகழ்வு மாநில காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில காவல்துறை துணைத் தலைவர், டத்தோ முகமட் ஃபுவாட் அப்துல் லத்தீப் மற்றும் தலைமை  அலுவலகத்தின் மூத்த காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்படும் பட்டுள்ளது.

வான் ருக்மான்  இதற்கு முன்பு கோலா சிலாங்கூர் மற்றும் செப்பாங் மாவட்டத்திலும் குற்றவியல் விசாரணை  இலாகாவின் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் காவல்துறை துணைத் தலைவர் பேசுகையில், எல்லா நிலைகளிலும் உள்ள காவல்படையினர் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டார்.

@கெஜிஎஸ்


Pengarang :