RENCANA PILIHANSELANGOR

பின் புற சாலைகளை அழகுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்

சுபாங் ஜெயா, மே 4:

பொது மக்கள்  அனைவரும் ஒத்துழைப்பும், அர்ப்பணிப்பு தன்மையும் கொண்டு சன்வே மெட்ரோ பின் புற சாலை அழகுப்படுத்தும் முயற்சி நோக்கத்தை அடைய உறுதி செய்ய வேண்டும்.

சுபாங் ஜெயா சட்ட மன்ற உறுப்பினர் ஹானா இயோ கூறுகையில், சுபாங் ஜெயா நகராண்மை கழகமும்  அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து செயல் படுத்த வேண்டும் என்றார்.

பொது மக்களின் ஒத்துழைப்பும் நகராண்மை கழகத்தின் அமலாக்கமும் இரு சேர்ந்து வரும் போது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் என்று தெரிவித்தார்.

”   ஆரம்பத்தில் மிக கடினமான இருந்தாலும் பொது மக்கள் அதன் பலனை பார்க்கும் பொழுது எல்லோரும் மன மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால், அனைவரும் கொஞ்சம் பொறுமையாக  இருந்து, நடவடிக்கை அல்லது முயற்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்,” என்று கூறினார்.

Hannah Yeoh

 

 

 

 

 

 

சன்வே மெட்ரோ பின் புற சாலை அழகுப்படுத்தும் திட்டத்தின் மக்கள் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். அவரோடு  எம்பிஎஸ்ஜெ தலைவர் நூர் ஹிஷாம் மற்றும் துணைத் தலைவர் முகமட் ஸுல்கார்னயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஹானா மேலும் விவரிக்கையில், எல்லா முதல் முயற்சிகளுக்கும் சரியான முறையில் திட்டமிட்டு  அமுல்படுத்தினால் வெற்றி கிடைக்கும் என்றார்.


Pengarang :