பிந்துலு, மே 11:
காவல்துறை இரண்டு உள்நாட்டவரை போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதின் சந்தேகத்தில் பேரில் கார் நிறுத்துமிடத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். சம்பவம் ஏறக்குறைய இரவு மணி 10.50-க்கு நடந்ததாகவும், உணவக உதவியாளரான 27 வயது மதிக்கத்தக்க ஆடவரும் சேர்ந்து 26 வயது வேலையில்லாத ஆடவரும் நான்கு சக்கர வாகனத்தில் கைது செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது.
பிந்துலு மாவட்ட காவல்துறை தலைவர், ஆணையர் ஜைலானி அமிட் கூறுகையில், காவல்துறை ஒரு பேக்கேட் ஷாபு, ஏழு பேக்கேட் போதைப் பொருள், பத்து பேக்கேட் கஞ்சா, 24 போதை மாத்திரைகள் மற்றும் 71 பேக்கேட் கெதாமின் அந்த காரில் கைப்பற்றப் பட்டன என்று விவரித்தார். இதன் மதிப்பு ரிம 22,000 என்று கணிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை சோதனை செய்யும் போது 35 கருப்பு பேக்கேட் பறிமுதல் செய்யப்பட்டது என தெரிவித்தார்.
Sumber: BERNAMA