SELANGOR

பத்து ஆராங் & குண்டாங் வெள்ளத் தீர்வு காண முயற்சிகள் எடுக்கப்படும்

ஷா ஆலம், மே 24:

பத்து ஆராங் சாலை மற்றும் குண்டாங் வெள்ளப் பிரச்சனைகளைக் களைய வடிகால் சீரமைப்பு மற்றும் நீர் குளங்கள் அமைக்கும் பணிகள் பட்டியல் இடப்பட்டுள்ளது என்று உள்கட்டமைப்பு, பொது வசதிகள் மற்றும் வேளாண்மை அடிப்படை தொழில் ஆட்சிக் குழு உறுப்பினர் ஜைடி அப்துல் தாலிப் கூறினார். இரு நதிகளின் சங்கமம் மற்றும் கூர்மையான வளைவுகள் கொண்ட நீரோட்டம் கோங் ஆற்றின் நீர் குறுக்கீடு ஏற்படக் காரணம் என்று விவரித்தார்.

கோங் ஆற்றின் சீரமைப்பு பணிகள் தொடங்கி விட்டது என்றும் வெள்ளதிற்கான மூல காரணம் கண்டறிந்து விட்டதாக தெரிவித்தார்.

”   கோங் மற்றும் பாக்காவ் ஆறுகளின் பண்டார் கண்டிரி ஹோம்ஸ்லில் சங்கமம் நீரோட்டம் பாதிக்கப்படுகிறது,” என்று ஜைடி தெளிவுபடுத்தினார்.


Pengarang :