பூச்சோங், ஜூன் 9:
மாநில அரசாங்கம் ரிம 20,000 ஒதுக்கீடு செய்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை (ஸ்பா) ஸ்ரீ கெசிடாங் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது என்று கின்னாரா சட்ட மன்ற உறுப்பினர் எங் சீ ஹான் கூறினார். ஸ்பா சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மாற்றுத் திட்டமாகும். இஃது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயனீட்டை குறைக்கிறது.
பல்வேறு அன்றாட வேலைகளை செய்ய இந்த மழைநீர் சேகரிப்பு திட்டம் உதவுகிறது என்றார்.
மேலும் கூறுகையில் அவர், தொடர்ந்து நிதி ஒதுக்கீடு இருந்தால் மற்ற இடங்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்திடப்படும் என்று கூறினார்.
இதனிடையே ஸ்ரீ கெசிடாங் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் நடவடிக்கை குழு தலைவர் யாப் சீ மெங் கூறுகையில் இத்திட்டம் ஆரம்பித்த பிறகு 299 குடும்பங்கள் பயன் அடைந்ததாகவும் கூறினார்.