ஷா ஆலம், ஜூலை 5:
கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர், டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அம்னோ தேசிய முன்னணி கூறுவது போல தமக்கு அம்பாங் நாடாளுமன்ற தொகுதி வேண்டாம் என்று ஆணித்தரமாக கூறினார்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான, அஸ்மின் அலி தமக்கு பெக்கான் நாடாளுமன்ற தொகுதி மீது ஒரு கண் வைத்துள்ளதாகவும், கோம்பாக் தொகுதியில் இருந்து இன்னொரு தொகுதிக்கு போக சூழ்நிலை உருவாகுமானால் கண்டிப்பாக பெக்கான் செல்ல இருப்பதாக நகைச்சுவையோடு தெரிவித்தார்.
” நான், ஏற்கனவே பல முறை அறிவித்து விட்டேன். அப்படி கோம்பாக் நாடாளுமன்றத்தில் இருந்து மாறுவதாக இருந்தால் பெக்கான் செல்ல ஆர்வத்துடன் இருக்கிறேன்,” என்று ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தின் நோன்பு பெருநாள் விருந்து நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
#கேஜிஎஸ்