SELANGORUncategorized @ta

ஸ்ரீ மூடா சட்ட மன்றத்தின் தீபாவளி விருந்துபசரிப்பு

ஷா ஆலம், நவம்பர் 13:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் அரசியல் செயலாளர் மற்றும் ஸ்ரீ மூடா சட்ட மன்ற உறுப்பினருமான சுஹாய்மி ஷாபியி அவர்களின் தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்ச்சி ஆறு வெவ்வேறு இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. மாலையில் தாமான் அலாம் மெகாவிலும், இரவில் புக்கிட் கெமுனிங்கிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்தது.

இரண்டு முறை ஸ்ரீ மூடா சட்ட மன்றத்தில் வெற்றி பெற்ற சுஹாய்மி ஷாபியி இந்திய வாக்காளர்கள் மத்தியில் பிரபலமான தலைவர் என்று கூறினால் அது மிகையாகாது. 2014- இல் இருந்து சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் பொறுப்பை வகித்தாலும் வாக்காளர்களின் பிரச்சினைகளை தீர்க்க எப்போதும் தயங்கியது கிடையாது.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடர்ந்து பரிவு மிக்க மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது எனவும் இந்தியர்கள் அதிகம் பதிந்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அலாம் மெகாவில் நடைபெற்ற தீபாவளி விருந்துபசரிப்பு ஷா ஆலம் மாநகராட்சி மன்ற உறுப்பினரான திருமதி ரோஸானா மற்றும் இந்திய தலைவரான கணபதியும் கலந்து கொண்டனர்.

புக்கிட் கெமுனிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ், ஷா ஆலம் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களான பாப்பா ராயுடு, பிரகாஷ் ராவ், டான் ஆ காவ், பல சமுதாயத் தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 


Pengarang :