ANTARABANGSA

விமான விபத்து : போயிங் மீது பலியானவர் வாரிசி வழக்கு பதிவு

வாஷிங்டன், மார்ச் 29-

அடிஸ் அபாபா கடற்கரையில் விழுந்து நொறுங்கிய மேக்ஸ் 737 விமானத்தில் பலியானவர்களில் ஒருவரின் குடும்ப உறுப்பினர் போயிங் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு தொடுத்துள்ளதாக ரஷ்ய ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அந்த விமான விபத்தில் பலியான ஜெக்சன் முசோனி என்பவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் மீது அமெரிக்க கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

போயிங் நிறுவனத்துடன் அமெரிக்கா வான் போக்குவரத்து கண்காணிப்பு அதிகாரியும் அந்த விபத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த வழக்கில் முசோனியின் வாரிசு குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த மார்ச் 10 ஆம் தேதி எதியோப்பியாவில் 157 பேர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட போயிங் விமான நிறுவனத்தின் 737 மேக்ஸ் 8 மற்றும் 737 மேக்ஸ் 9 ஆகிய ரக விமானங்களை அமெரிக்க அரசாங்கம் தடை செய்தது.


Pengarang :