புத்ரா ஜெயா, மே 3-
போலீஸ் குற்றச் செயல் மற்றும் புகார் சுயேட்சை ஆணையம் (ஐபிசிஎம்சி) அமைக்கப்பட்டது போலீஸ்காரர்களைத் தண்டிப்பதற்காக அல்ல என்று உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைடீன் யாசின் வலியுறுத்தினார்.
போலீஸ்காரர்களைக் குறி வைத்தே இந்த ஆணையம் அமைக்கப்பட்டதாக எழுந்துள்ள ஒரு கருத்து முற்றிலும் தவறானதாகும் என்றார் அவர்
“இன்னும் பல விவகாரங்கள் விளக்கமளிக்கப்படாமல் உள்ளன. போலீஸ்காரர்களை குறி வைத்தே இந்த ஐபிசி எம் சி அமைக்கப்பட்டுள்ளதாக பலரும் கருதுகின்றனர்” என்றார்.
“போலீஸ்காரர்கள் பல்வேறு குற்றங்களைப் புரிந்துள்ளனர் என்றும் அவர்களைத் தண்டிக்கவே இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக கருத்து நிலவுகிறது..இது சரி அல்ல” என்று பக்காத்தான் அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தின் போது செய்தியாளர்கள் கூட்டத்தில் முகைடீன் தெரிவித்தார்.