SELANGOR

குடிபோதையில் சாலை தடுப்பு சோதனையை மோதியவர் கைது – காவல்துறை

ஷா ஆலம், ஏப்ரல் 9:

பெட்டாலிங் ஜெயா ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையில் காவல்துறை நடத்திய சாலை தடுப்புச் சோதனையை குடிபோதையில் மோதிய ஆடவரை காவல்துறை கைது செய்தது என பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை ஆணையர் ஏசிபி நிக் எஸானி முகமட் ஃபசால் தெரிவித்தார். இரவு 9.15 மணிக்கு டமன்சாரா தோல் சாவடியை நோக்கி நிசான் அல்மீரா காரில் பயணித்த 33 வயதுடைய ஆடவரை கைது செய்து சுவாச பரிசோதனை நடத்திய காவல்துறை அவர் குடிபோதையில் இருப்பதாக உறுதி செய்தது.

இந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் யாரும் காயமடையவில்லை என்றும் சம்பந்தப்பட்ட ஆடவர் செக்சன் 279 குற்றவியல் சட்டத்தின்படி அபாயகரமான முறையில் வாகனத்தை செலுத்தியது மற்றும் நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) பின்பற்றாதது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர் நோக்குவார் என்று அவர் மேலும் தெரிவித்தார். இது மட்டுமின்றி, நேற்று மேலும் 12 நபர்களை பிகேபி நடைமுறைகளை பின்பற்றாத காரணத்திற்காக காவல்துறை கைது செய்தது என நிக் எஸானி முகமட் ஃபசால் கூறினார்.


Pengarang :