PUTRAJAYA, 4 Mei — Kelihatan seorang pengunjung mengambil peluang untuk membeli belah selepas kedai -kedai memulakan operasi setelah Kerajaan membenarkan hampir kesemua sektor ekonomi dan aktiviti perniagaan beroperasi bermula hari ini tertakluk kepada prosedur operasi standard yang ketat.?–fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

ஏடிஎம் இயந்திரங்கள் நாளை முதல் வழக்க நிலையில் செயல்படும்

புத்ராஜெயா, மே 31:

அன்றாட வங்கி நடவடிக்கைகளுக்கு வசதியாக அமையும் வண்ணம் தானியங்கி பண இயந்திரத்தின் செயல்பாடு, நாளை முதல் மீண்டும் வழக்கம் போல் தொடங்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

“இருப்பினும், ஏடிஎம் இயந்திரங்களைக் கையாளும் போது பொதுமக்கள் கூடல் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் நிபந்தனைகுட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பிகேபிபி) குறித்த தினசரி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பிகேபி) அமல்படுத்தியதைத் தொடர்ந்து, ஏடிஎம் இயந்திரத்தின் செயல்பாடு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே என கடந்த ஏப்ரல் மாதம் அரசாங்கம் அறிவித்தது. இது, கோவிட்-19 பாதிப்பை தடுக்கும் நோக்கில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.


Pengarang :