SELANGOR

‘கீஸ்’ அட்டை எதிர் வரும் ஜனவரி 22-இல் வெளியிடப்படும்

ஷா ஆலம், ஜனவரி 5:

அன்புத் தாய் விவேக சிலாங்கூர் அட்டை (கீஸ்) எதிர் வரும் ஜனவரி 22-இல் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியினால் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில சுகாதாரம், சமூக நலன், மகளிர் மற்றும் குடும்ப மேம்பாடு ஆகிய நிரந்தர குழுவின் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி கூறினார் இன்று தெரிவித்தார். மேற்கண்ட நிகழ்வு நடக்கும் இடம் பின்பு அறிவிக்கப்படும் என்றார்.

”  ஜனவரியில் 30,000 கீஸ் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியானவர்களை அடையாளம் காணப்படும். இதன் வழி  மாநில மகளிர் பயன் அடைவார்கள்,” என்று ‘புத்தாண்டில் தகவல் ஊடகங்களுடன் மாலை தேநீர்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திறன்மிக்க மகளிர் மையத்தின் ஆலோசகர் ஸூரைடா கமாரூடின் மற்றும் அதன் இயக்குனர் ஹானிஸா தால்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.

#தமிழ் அரசன்


Pengarang :