SELANGOR

நீர் விவகாரத்தை கொண்டு அரசியல் செய்ய வேண்டாம்

ஷா ஆலாம்,மார்ச் 26:

சிலாங்கூரில் நீர் விவகாரத்தை கொண்டு யாரும் அரசியல் செய்யக்கூடாது என்றும் அதனை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறும் சிலாங்கூர் சுல்தான்,சுல்தான் ஷராஃப்புடின் இட்ரிஸ் ஷா கேட்டுக் கொண்டார்.

மக்களின் நலன் கருதி மத்திய அரசும் மாநில அரசும் ஒத்துழைத்து நீர் விவகாரத்தை நன் நிலையில் கையாள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு முன்னர் 5வது கூட்டத் தொடரை கடந்தாண்டு தொடக்கி வைத்த போது நீர் விவகாரத்தை அரசியலாகாமல் கடப்படுடன் செயல்படுங்கள் என கூறியாதையும் சுல்தான் நினைவுக்கூர்ந்த்தார்.

நீர் விவகாரத்தில் மக்கள் நலன் சார்ந்திருப்பதால் அப்பிரச்னைக்கு. உடனடி தீர்வு காண சுல்தான் அறிவுறுத்தினார்.

மேலும்,அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அரசியல் செய்யாமல் மக்களின் நலன் மற்றும் மாநில வளர்ச்சிக்காகவும் இருத்தல் வேண்டும் என்றார்.


Pengarang :