NATIONAL

நம்பத்தகுந்த தலைவர்களை தேர்ந்தெடுங்கள்

ஷா ஆலாம், ஏப்ரல் 6:

சிலாங்கூர் மாநிலத்தில் வாழும்  பல்லின மக்கள் தங்களின் நலன்களைபாதுகாக்க நம்பத்தகுந்த தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கோம்பாக் செத்தியா சட்ட மன்ற உறுப்பினர் ஹாஸ்புல்லா முகமட் ரிஸூவான் கூறினார். மக்கள் படும் இன்னல்கள் புரிந்து கொண்டவர்கள் மட்டுமில்லாமல் நேர்மையான தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் முனைப்பு காட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

”  நாடாளுமன்றத்தை களைத்தவுடன், நாடு மற்றும் மாநிலத்தின் எதிர்காலம் மக்களின் கைகளில் இருக்கிறது. போட்டியிடும் அனைத்து கட்சிகளின் கொள்கை அறிக்கைகளை சீர்தூக்கி சரியான முடிவு எடுக்க வேண்டும். நம்பிக்கையான தலைவர்கள் மக்கள் எதிர் நோக்கும் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காண முடியும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தனர். இதற்கு முன்பு, பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் நாளை, ஏப்ரல் 7-இல் களைத்து விடுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Pengarang :