NATIONAL

பாக்காத்தான் மத்திய அரசாங்கத்தை கைப்பற்றினால் 4 நாட்கள் கூடுதலாக விடுமுறை வழங்கப்படும்?

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 24:

எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் மத்திய அரசாங்கத்தை கைப்பற்றினால் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி, கூடுதல் விடுமுறையாக வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ( மே 10 & 11) மலேசிய மக்களுக்காக வழங்கப்படும் என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் அமைப்பு தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். பொது மக்கள் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை , சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களை பொது விடுமுறையாக அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது என்றார்.

”  பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழ்நிலையில் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை விடுமுறையாக வழங்கப்படும். நான் விடுமுறையை பிடிக்காதவன். ஆனாலும், மற்றவர்கள் விடுமுறையை விரும்புகின்றனர். நமது நாட்டில் விடுமுறை தினங்கள் அதிகமாக இருக்கிறது. ஆனாலும் இந்த முறை மாற்றம் வரவேண்டும்,” என்று 14-வது பொதுத் தேர்தலுக்கான பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் வேட்பாளர்களின் விளக்கமளிப்பு கூட்டத்தில் பேசும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :